Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலத்தில் பட்டப்பகலில் திமுக பிரமுகருக்கு அரிவால் வெட்டு

Webdunia
சனி, 15 மார்ச் 2014 (16:49 IST)
சேலத்தில் நான்கு ரோடு பகுதியில் திமுக பிரமுகர் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ஹரிபுத்திரன் மகன் வெற்றிவேல் (42). சின்னப்புதூர் அழகாபுரத்தைச் சேர்ந்த இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திமுகவிலும் கட்சிப் பணியாற்றி வருகிறார்.

சனிக்கிழமை காலை சகோதரி மாதேஸ்வரியுடன், காரில் மீன் வாங்க கடைக்கு வந்தார். மீன் கடையில் வெற்றிவேல் மீன்வாங்கிக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த மர்ம நபர் திடீரென வெற்றி வேலை அரிவாளால் வெட்டினார். அரிவாள் வெட்டினால் காயமடைந்த அவர், அலறி துடித்து கீழே விழுந்தார்.

அரிவாளால் வெட்டியவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினார். வெற்றிவேல் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அஸ்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments