அமைச்சர் கோ.சி.மணி இன்று சட்டப்பேரவையில் கூட்டுறவுச் சங்க தனி அலுவலர் பணிகால நீட்டிப்பு மசோதாவை அறிமுகப்படுத்தினார். இதற்கு எதிர்கட்சிகள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தன.
தனி அலுவலர் பணிக்காலம் 6 மாதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்ப நிலையிலேயே இதனை அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.