ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 7, 8 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
2009-10ஆம் கல்வியாண்டில் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலைக் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் சென்னை-1, காமராஜர் சாலை, சிங்காரவேலர் மாளிகை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வரும் 7ஆம் தேதி காலை 10 மணிக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல்களும், மாலை 2 மணிக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல்களும் நடைபெறுகிறது.
8ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதல்களும், காலை 11.30 மணிக்கு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதல்களும், மாலை 2 மணிக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல்களும் நடைபெறுகிறது.
இந்த தகவல் ஆதிதிராவிடர் நல ஆணையர் ஒம்.பொ.சிவசங்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.