அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டிராய் டிக்கர்சனின் மனைவி கிறிஸ்டின் டிக்கர்சன் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார். பிரசவ தேதிக்கு மேல் இரண்டு வாரங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. எனவே, அவர் கணவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். செல்லும்போது, அந்த அரிய தருணங்களைப் படம் பிடிக்க, தன் தலையில் ஒரு கேமராவைப் பொருத்தியிருந்தார். அந்தக் கேமரா, கார் செல்லும் பாதைகளையும் மனைவியையும் படம் பிடித்துக்கொண்டே வந்தது.
மருத்துவமனை வாசலுக்கு வந்ததும் கார் கதவைக் கணவர் திறந்தார். வெளியே வந்த மனைவி கிறிஸ்டினுக்கு அங்கேயே பிரசவ வலி வந்துவிட்டது. பக்கத்தில் இருந்த கணவரே குழந்தை வெளியே வருவதற்கு உதவினார். செய்தி அறிந்து மருத்துவமனையிலிருந்து செவிலியர்களும் மருத்துவர்களும் ஓடி வருவதற்குள் நடைபாதையில் நின்ற நிலையிலேயே கணவரின் கையில் ஆண் குழந்தை பிறந்துவிட்டது. இது, அப்படியே அவர் கேமராவில் பதிவானது.
இந்த அரிய வீடியோவை இங்கே பாருங்கள்.