இந்தியாவின் நெடிய வரலாற்றில் இந்திய ரயில்வே துறைக்கு முக்கிய இடம் உண்டு. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் நலனுக்காகத் தொடங்கி, மேம்படுத்திய ரயில்வே துறை, பிற்காலத்தில் இந்தியாவுக்குப் பெரும் நன்மைகள் புரியத் தொடங்கியது. இந்தியாவின் அடையாளமாக, அழிக்க முடியாத வரலாற்றுச் சாட்சியமாக விளங்கும் ரெயில்வே துறை தொடர்புடைய சில காட்சிகளை இங்கே பாருங்கள்.
1870 - பாகிஸ்தான் தனி நாடாக பிரிவதற்கு முன்னதான இந்தியாவின் லாகூரில் அமைக்கப்பட்ட ரயில் நிலையம்.
1880 - மகாராஷ்டிராவின் புனேக்கு அருகே அமைக்கப்பட்ட பின்னோக்கி இயக்கப்படும் மலை ரயில் பாதை
1930 - பாகிஸ்தான்-ஆஃப்கானிஸ்தான் எல்லையில் டோர்காம் நகரத்திற்கு அருகே உள்ள லண்டி கானா ரயில் நிலையம்.
1940 - நிஜாமில் உள்ள ரயில்வே துறையின் தொழிற்சாலை
1947 - இந்தியப் பிரிவினையின் போது...
ஆகஸ்ட் 1947 - பாகிஸ்தானுக்கு இயக்கப்பட்ட 30 சிறப்பு ரயில்களில் புதுடெல்லியில் இருந்து பாகிஸ்தானுக்கு புறப்படும் ஒரு ரயில்.
1947 - டெல்லியில் இருந்து பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் செல்லும் ரயில்.
1951 - பியாஸ் நதிக்கு குறுக்கே ரூ.1.46 கோடியில் அமைக்கப்பட்ட ரயில் பாதை மேம்பாலம்.
1952 - வடக்கு ரயில்வேயில் முகேரியன்-பத்தான்கோட் இடையே அமைக்கப்பட்ட ரயில் பாதையில் இயக்கப்படும் முதல் ரயில்.