Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதி நெருக்கடியால் தற்கொலைகள்

Webdunia
உலக நாடுகள் பலவற்றிலும் தற்போது கடுமையான நிதி நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார பிரச்சினை, நிதி மற்றும் வாங்கும் சக்தியை குறைப்பது, வளர்ச்சி விகித சரிவில் மட்டும் பாதிப்பை ஏற்படத்தவில்லை, மேலும் மக்களிடம் விரக்தி, மன அழுத்தம் உட்பட பல உளவியல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக் காலங்களில் மட்டும் முதலீட்டாளர்கள், பங்கு தரகர்கள், முதலீட்டு வங்கிகளில் வேலை செய்வோர் உளவியல் நிபுணர்களை சந்தித்து சிகிச்சை பெறுவது மூன்று மடங்கு அதிகமாகி உள்ளது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

உலக சுகாதார அமைப்பு, நிதி நெருக்கடிகளால் தற்கொலைகள் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

இப்போதைய நிலையில், வளர்ந்த நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளோரில் 75 விழுக்காட்ட ி னர் உளவியல் சிகிச்சை பெற்றுக் கொள்ளவில்லை.

நிதி நெருக்கடியால் வரும் பாதிப்புகளை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. வருங்காலத்தில் உளவியல் ரீதியான பிரச்சினையில் சிக்குவதும் தற்கொலை செய்வதும் அதிகரிக்கவே செய்யும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments