தேவதைகளின் தேவதை

தபு சங்கர்
சனி, 3 அக்டோபர் 2015 (16:49 IST)
தேவதைகளின் தேவதை. 


 
 
 


எதற்காக 
நீ கஷ்டப்பட்டுக் 
கோலம் போடுகிறாய்.
பேசாமல் 
வாசலிலேயே 
சிறுது நேரம் உட்கார்ந்திரு 
போதும்.
****************
நீ குளித்து முடித்ததும் 
துண்டெடுத்து உன்கூந்தலில்
சுற்றிக் கொள்கிறாயே...
அதற்குப் பெயர்தான் 
முடி சூட்டிக்கொள்வதா.
***************
தான் வரைந்த ஓவியத்தை 
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப்போல 
நீ ஒவ்வொரு முறையும் 
சரிசெய்கிறாய் 
உன் உடையை.
***************
இலைகள் காய்ந்தால் 
உயிர் உள்ள கொடியும் 
பட்டுப் போகிறது.
உன் உடைகள் காய்ந்தால் 
உயிரற்ற கொடியும் 
உயிர் பெறுகிறது.
**************
நீ யாருக்கோ செய்த 
மௌன அஞ்சலியைப் 
பார்த்ததும்.....
எனக்கும் 
செத்துவிடத் தோன்றியது

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்கால உடல் பிரச்சனையை போக்கும் கேரட்!.. இவ்வளவு நன்மைகளா!...

நோயை போக்கும் கத்திரிக்காய்!.. இவ்வளவு பலன்களா?!.. வாங்க பார்ப்போம்!...

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை நேரடியாக சாப்பிடலாமா? தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாமா?

காலிபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் எவை எவை?

ஓவர் மேக்கப்பால் சருமத்திற்கு பிரச்சனையா? இதை செய்தால் போதும்..!

Show comments