Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழா! முத்துக்குமாரா!

தமிழா! முத்துக்குமாரா!
, புதன், 10 பிப்ரவரி 2010 (20:53 IST)
கொந்தளித்து எழுந்தக் குருதிக்
கொழுந்து விட்டு எரிந்ததடா
கொடுமைப்படும் தமிழனத்தைக்
கொள்கை வகுக்கக் செய்ததடா!

வந்தானை வாழவைத்தோம்
வணங்கிக் கூனி நெளிந்து வாழ்ந்தோம்
வைத்து விட்டான் அடிமையாக - முத்து
வகை செய்தான் நம்மை வளமையாக்க.

கொடிக் காத்தான் குமரன் - தமிழனக்
குடிக் காத்தான் முத்துக்குமரன்
விழிக்க வைத்தான் செந்நீ எழுப்பி
வெற்றி கொள்வான் தமிழர் தலைவன்.

நம்மைக் கடைக்கோடி எண்ணிவிட்டான் - இந்தியன்
நமது கால் ஒடிக்க முடிவெடுத்தான் - நாளை
நொண்டியடிக்கப் போகிறான் - பலனாய்
நொந்துச் சிதறப் போகிறான்.

சாதிமத வேறுபாடு தவிர்த்தெழுவான் தமிழன்
தரணியில் புகழ்படைக்க தான்உழைப்பான் தமிழன்
ஊடுறுவிப் புல்லர்களை ஒடுக்கிடுவான் தமிழன்
உலகோர் வாழ்வுபெற ஒத்துழைப்பான் தமிழன்.

- பொன்பரப்பியான்

Share this Story:

Follow Webdunia tamil