Select Your Language
காற்றைத் தேடி
பசுவய்யா
, புதன், 4 நவம்பர் 2009 (16:56 IST)
உன்னதம் இதழில் வெளியான காற்றைத் தேடி எனும் கவிதை உங்களுக்காக... நமது வருங்கால சந்ததிகளின் நிலையை எளிமையாக விளக்குகிறது இந்தக் கவிதை. காற்றின் நஞ்சை இழுத்து
திணறிற்று என் மூச்சுக் குழாய்மேற்குக் கடலோரம் சென்றால்கலப்படம் குறைந்த காற்று
கிடைக்கும் என்றார்கள்.மேலும் தொடர்ந்து சென்றால்வெகு தொலைவில்வேறு திசைகளில்வெவ்வேறு வெளிகளில்காற்றின் எச்சம்காணக் கிடைக்கும்என்றார்கள்.கடலில் நீச்சலடித்துச் சென்றால்அடிவானம் தாண்டியதும்காற்றுக் கிடைக்கலாம்என்றார்கள்.பறக்கத் தெரிந்தால்மேக மண்டலங்களைத் தாண்டிகாற்றை இழுக்கலாம்என்றார்கள்.நான் ஆயத்தமானேன்.அப்போது எனக்குதாகம் எடுத்துநா வரண்டுதலையும் சுற்றிற்று.`
குடிநீர் குடிநீர்' என்றுமுனகத் தொடங்கினேன்`
காற்றிடம்தான் கேட்க வேண்டும்'என்றார்கள்.நன்றி : உன்னதம்ஏப்ரல் 94, காலாண்டிதழ் 2