Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவிதைகள் : நாஞ்சில் நாடன்

கவிதைகள் : நாஞ்சில் நாடன்

Webdunia

நன்றி : மண்ணுள்ளிப் பாம்பு

(கவிதைத் தொகுப்பு)

ஆசிரியர் : நாஞ்சில் நாடன

விஜயா பதிப்பகம்,

கோவை - 1.

விலை : ரூபாய் 30/-

பூசணி

மத்தன
பரங்கி
அரசாணி
காய்தான் எல்லாம
கொடுங்கோல
செங்கோல
குடியரச
மதச்சார்பற்ற மக்களாட்சிப் பனம்பழம
யாவற்றின
நிறம் சுவ
நாற்றம் ஒன்ற

----

உன்னால் முடியாத
விலகி நில
முடியுமானால
இரண்டு நீயும் போட
அடிவாங்குபவன் சார்பில
நிற்பது அபாயம

----

தொடுவானம்
ஆட்சித் தலைவரின் அருகில
நின்ற
மடித்த மனுவைக் கொடுக்கும
இருட்டின் முகத்தில் எத்தனை வெளிச்சம
தொடும் தூரத்தில் நின்றத
சிறுகண் ஒளி
சிலம்பித் திரிகையில
மடித்த மனுவ
கீழ் நோக்கிய பயணாய
தரை தொடாமல
இருட்டுக்கு அறிவு விடியும
அகாலத்தில
சின்ன இருட்டின
சிந்தனையில
தொடுவானம் துலங்கும

ஞானோபதேசம

பொய்யின் மொழி பேச
தாயின் கோயிலில் திருட
பேரிளம் பெண்ணையும் கற்பழி
சகமனித உதிரம் உறிஞ்ச
பிள்ளைக்கறி சமைத்துண
பொன்னும் பொருளும் கொணரா மருமகளைக
கருக்க
கொலைத் தொழில் பழக
உயிர் மருந்தில் ஊழல் செய
செய்க பொருள
வையத் தலைமை கொள
வாழ்வாங்கு வாழ்வாய் காண்.

கவிதைகள் : நாஞ்சில் நாடன்

நன்றி : மண்ணுள்ளிப் பாம்ப
(கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் : நாஞ்சில் நாடன
விஜயா பதிப்பகம்,
கோவை - 1.
விலை : ரூபாய் 30/-

சொல்லில் முடியாத சோகம

இரவெலாம் விழித்த
அடர்மழை பொழியும
காலையில
எழுதி முடித்தான
நோபல் பரிசின் ஏற்புர
படைப்பை இனிமேல
யோசிக்கலானான
----
ஆணைக்கு முன்னால் பதினாறு பேர்கள
தரையோடு தரையாய் நின்று கொண்டிருந்தனர
இருபத்திரண்டு பேர் ஐம்படைத்தாலி
மண்ணில் உராயும் உயரம் அளவில
மீதிப்பேரை அண்ணாந்து பார்த்தால
சுளுக்கும் கழுத்த
அவரையும் சற்று அளந்தால் என்
ஆணை சிலரை அளந்தது முட்டுக்கு மேல
சிலரை அளந்தது தோள்பட்டை வர
சிலரை அளந்தது குறுக்கு வாட்டில
ஐயோ தாங்கொணாக் குள்ளம் என்றத
---
வேர்கள
அவசரத் தந்தி
வியர்வையில் ஊ
ரயிலுக்கு அலைகையில
ஆங்கோர் சல்லிவேர

புறக்கடை ஓரம
துடுப்புக் குழிக்குத
தோண்டக் குனிந்தால
தோன்றும் ஒன்ற

வரிசையில் எங்க
நின்றிருந்தாலும
இயல்பாய் நுழையும
இழைபோல் ஒன்ற

நியாயத்திற்குப் பாயும
மடைய
மறித்துக் குறுக்க
கிடக்கும் ஒன்ற
பல்கலைக்கழகப் பாதையில் ஒன்ற

கர்பக்கிரக மூலையில் ஒன்ற
மருத்துவமனையின் மாடியில் ஒன்ற
காவல் நிலையச் சுவரில் ஒன்றெ
சீமைக் கருவை போல
அடர்ந்தும் படர்ந்தும
ஈரம் உறிஞ்சும
வேர்கள் எங்கும்

எதிர்ப்ப

பொருத்தாப் புகைப்பான் உதட்டில் நிற்
ஓடி ஏறுவர
கடைசி இழுப்பை ஒங்கி எறிந்த
துள்ளி ஏறுவர
விரையும் படியில் ஓய்வாய் நின்ற
உறிஞ்சி ஊதுவர
எவன் கேட்க இருக்கிற தென்றும
குனிந்தும் ஒளிந்தும
புகையாய்ப் பெருக்குவர
என் போல் பயணியர
இருமலை மட்டும் எதிர்ப்பாய
சொல்வார்.

Share this Story:

Follow Webdunia tamil