ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள்.
ஹைக்கூ கவிதைகள்
* வெடிகுண்டு சப்தம்
தாலாட்டுகிறது
ஈழக் குழந்தைகளை...!
* குடித்த பின்
குடும்பச் செலவானது
குவளைகள்...!
* மைல்கள்
சாமியானது சந்தோஷம்
பூசாரி!
* காந்தி ஜெயந்தி
கனவு கலைந்தது
`குடி' மகனுக்கு!
* மரண அறிவித்தல்
தவளையின் சப்தம்
* சாலையோர மரம்
சாமியானதும்
சரியாமல் நின்றது!