கருவிலே பிறந்தோமடா
மடியிலே தவழ்ந்தோமடா
தாவித் தாவி நடந்தோமடா
பள்ளிக்கூடம் சென்றோமடா
பாடங்களைப் படித்தோமடா
பட்டங்களை வாங்கினோமடா
வேலைக்குச் சென்றோமடா
மணங்களை முடித்தோமடா
பிறந்த கருவினை மறந்தோமடா
முதியோர் இல்லத்தில் அடைத்தோமடா
இது நாளை நமக்கும் தொடருமடா
இது தான் இயற்கையின் நீயதியடா