Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்னை

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (15:23 IST)
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள்.

அன்னை

எனது ஜனனத்திற்காக
பல முறை
மரணவாயிலை எட்டிப்பார்த்தவள் - நீ
உன் விரல்களை பற்றிக் கொண்டு -
தான்
நடை பழகினேன் - இன்று
உனக்கு முன்பாகச்
செல்வதைக் கண்டும்
சந்தோசப்படுகிறாய்!
உன் அசைவுகளைக் கண்டு
பேசத் துவங்கியவன்!!
இன்று உன்னை விடவும்
பேசுவதைக் கண்டும்
சந்தோசப்படுகிறாய்!
உன் விரல்களைக் கொண்டு
எழுதப் பழகியவன்-இன்று
உன்னை விடவும்
எழுதுவதைக் கண்டும்
சந்தோசப்படுகிறாய்!
எத்தனை
இரவுகள்
உன் தூக்கம்
தொலைத்திருப்பாய்...!
வலிகளை
மட்டும்
கற்றுத் தந்தவன்
நான்....
என் வலி
கண்டதும்.... - நீ
ஏன்
துடிதுடித்துப் போகிறாய்?
தாய் என்பதாலா...?
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments