Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்னை

அன்னை

Webdunia

, வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (15:23 IST)
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள்.

அன்னை

எனது ஜனனத்திற்காக
பல முறை
மரணவாயிலை எட்டிப்பார்த்தவள் - நீ
உன் விரல்களை பற்றிக் கொண்டு -
தான்
நடை பழகினேன் - இன்று
உனக்கு முன்பாகச்
செல்வதைக் கண்டும்
சந்தோசப்படுகிறாய்!
உன் அசைவுகளைக் கண்டு
பேசத் துவங்கியவன்!!
இன்று உன்னை விடவும்
பேசுவதைக் கண்டும்
சந்தோசப்படுகிறாய்!
உன் விரல்களைக் கொண்டு
எழுதப் பழகியவன்-இன்று
உன்னை விடவும்
எழுதுவதைக் கண்டும்
சந்தோசப்படுகிறாய்!
எத்தனை
இரவுகள்
உன் தூக்கம்
தொலைத்திருப்பாய்...!
வலிகளை
மட்டும்
கற்றுத் தந்தவன்
நான்....
என் வலி
கண்டதும்.... - நீ
ஏன்
துடிதுடித்துப் போகிறாய்?
தாய் என்பதாலா...?

Share this Story:

Follow Webdunia tamil