Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துபாயில் இரண்டு இந்தியர்களுக்கு 25 ஆண்டு சிறை!

துபாயில் இரண்டு இந்தியர்களுக்கு 25 ஆண்டு சிறை!
, வியாழன், 31 ஜனவரி 2008 (20:09 IST)
துபாய் நாட்டு தொழிலாளரை கொலை செய்த வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் இரண்டு இந்தியர்களுக்கு 25 ஆண்டுச் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

துபாயில் வேலை செய்துவந்த இரண்டு இந்தியர்கள் அந்நாட்டு ஊழியர் ஒருவரை பாலைவனத்தில் வைத்து அடித்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டனர். கொலை சம்பவம் நடந்த இடத்திற்கும், இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்த இடத்திற்கும் 3 கி.மீ., தூரம் இருக்கும் என்றும், குற்றவாளிகள் மரபணு சோதனை மூலமாக கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் 37 மற்றும் 40 வயதுள்ள அந்த இரண்டு இந்தியர்களுக்கும் துபாய் நீதிமன்றம் 25 ஆண்டுகால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எனினும் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களின் பெயர் வெளியிடப்படவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil