Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியா: காவலில் இந்தியர் மரணம்

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (11:41 IST)
மலேசியாவில் காவல்துறையின் காவலில் இருந்த இந்தியர் மரணம் அடைந்தார்.

இந்தியாவைச் சேர்ந்தவர் குகன் (22). மலேசியாவில் வசித்து வந்த இவரை கார் திருடியதாக சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த 20ஆம் தேதி காவல்துறை காவலில் இருந்த போது இவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், காவல்துறையினர் அடித்து கொடுமைப்படுத்தியதால் மட்டுமே அவர் இறந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

அவரது இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கலந்து கொண்டனர். குகன் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் இறுதி ஊர்வலத்தின் போது கோஷமிட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

அவித்த முட்டை Vs ஆம்லெட்: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!

பெண்களுக்கு அதிக இதய நோய் பாதிப்பு! விழிப்புணர்வு தேவை..!

Show comments