Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (12:44 IST)
அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த பொறியாளர் சுதிர் குமார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சுதிர்குமார் (31) அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் உள்ள டொயாட்டோ கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு மர்ம மனிதர்கள் சிலர் சுதிர்குமாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் கடந்த 15 மாதங்களில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள், பணிபுரியும் இளைஞர்கள் உட்பட 8 பேர் இதே போல் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த வழக்கிலும் குற்றவாளிகளைப் பற்றியோ, குற்றம் எதற்காக நடந்தது என்பது பற்றியோ எந்த விவரமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

Show comments