சூப்பரான சுவையில் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள் :
 
கோழி இறைச்சி - அரை கிலோ
தக்காளி - 3 நறுக்கியது
சின்னவெங்காயம் - அரை கப் நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
காய்ந்த மிளகாய் - 2 நறுக்கியது
சிக்கன் மசாலா தூள் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள், கடுகு - சிறிதளவு
தேங்காய்ப்பால் - அரை டம்ளர்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
 
கோழி இறைச்சியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.
 
அதனுடன் கோழி இறைச்சி துண்டுகளை சேர்த்து கிளறவும். பின்னர் சிக்கன் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.

ஓரளவு வெந்ததும் தேங்காய்ப்பாலை ஊற்றி கிளறி மீண்டும் மூடி வைக்கவும். தேங்காய் பால் நன்கு வற்றி குழம்பு பதத்துக்கு வந்ததும் இறக்கி பரிமாறலாம். சூப்பரான சுவையில் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு தயார். இவை சாதம், இட்லி, தொசை, இடியாப்பத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏடிஎம் ரசீது ஆண்களின் விந்தணுவை பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்..!

நடு இரவில் விழிப்பு வந்தால், பிறகு தூக்கம் வருவதில்லை. இந்தப் பிரச்சினையை எப்படிச் சரிசெய்வது?

குழந்தைகளுக்கு இருமல் மருந்து அவசியமில்லை: மருத்துவர்களின் எச்சரிக்கை

மார்பக சீரமைப்பு தினத்தில் (BRA Day 2025) மார்பகப் புற்றுநோயை வென்ற 100-க்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைத்த சென்னை மார்பக மையம்

பற்களை பாதுகாக்க எளிய வழிகள்: நீண்ட கால ஆரோக்கியத்திற்கான கையேடு

அடுத்த கட்டுரையில்
Show comments