பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு மீன் மிக விருப்பமான் உணவாக இருக்கும். அதிகபட்சமாக நமது வீடுகளில் மீன் வறுவல் மற்றும் குழம்பு தான் செய்வது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக இந்த புதிய உணவு வகையை செய்து சுவைத்து பாருங்கள்.
தேவையானவை
மீன் - 1/2 கிலோ பச்சை மிளகாய் - 4 வெங்காயம் - 1 இஞ்சி துண்டு - 1 கொத்தமல்லித்தழை - 2 கைப்பிடி சிறிதளவு புதினா தழை கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன் சீரகம் - டீஸ்பூன் முட்டை - 1
செய்முறை
சதைப் பற்றுள்ள அரை கிலோ மீனை வேகவைத்து தோல், முள் நீக்கி உதிர்த்து வைக்க வேண்டும்.
உதிர்த்து வைத்துள்ள மீனை மிக்சியில் அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டித் துண்டுகளில் பிரட்டி சூடான எண்ணையில் பொரித்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் 4 டீஸ்பூன் நெய்யை சூடாக்கி, பொடியாக நறுக்கிய 2 வெங்காயம், ஒரு துண்டு இஞ்சி, 4 பல் துண்டு, இரண்டும் அரைத்த விழுது போட்டு வதக்கி, தோல் எடுத்து பொடியாக நறுக்கிய 3 தக்காளி சேர்த்து வதக்கவும்.
சுடுதண்ணீர் ஒரு கப் விட்டு அது கொதிக்கும்போது பொரித்து வைத்துள்ள மீன் உருண்டைகள், கரம் மசாலா, சீரகம் போட்டு சிறுதீயில் கொதிக்கவிடவும்.
நெய் மேலே மிதக்கும்போது கால் டம்ளர் பால், கொஞ்சம், குங்குமப்பூ போட்டு 2 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும். இறக்கி கிரீம், கொத்தமல்லித் தழையால் அலங்கரித்து பரிமாறவும்.
அரைத்த முந்திரி பருப்பு விழுது அரைகப், சேர்த்துக் கொண்டால் கிரேவி நல்ல மணத்தோடு ருசியாகவும் இருக்கும்.