சிக்கன் மன்சூரியன் என்ற இந்த சீன உணவு சமீப காலமாக இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெரும்பான்மையாக துரித உணவு கடைகளில் விற்கப்படும் இதனை சுவை மாறாமல் வீட்டில் செய்ய இந்த செயல்முறையை பயன்படுத்தவும்.
கோழிக் கறியை மிளகு தூள், முட்டை, உப்பு, இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் விழுது, சோள மாவு, சிறிது அளவு தண்ணீர் சேர்ந்த கலவையில் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த கோழிகறியை சிறு உருண்டைகளாக பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், வினிகர் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் பொறித்து எடுத்த கோழிக்கறி துண்டுகளை சேர்த்து நான்கு நிமிடங்களுக்கு சமைக்கவும். இதனோடு தேவைகேற்ப உப்பு, சோள மாவு சேர்த்து இறக்கவும்.