தேவையானவை
கோழிக்கறி - 1/4 கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 4
தக்காளி விழுது - 3
இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
பூண்டு- 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய், தனியா தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - சிறிது
எண்ணெய் - அரை கப்
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது
செய்முறை
கோழிக்கறை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.
2 நிமிடம் கழித்து தக்காளி விழுது, கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகாய், தனியா தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும், கோழிக்கறியைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கோழிக்கறியை மூடி நன்கு வேக விடவும்.
இறக்கும் போது கொத்துமல்லி, கறிவேப்பில சேர்க்கவும்.