இறாலை நன்கு சுத்தம் செய்து, 1 ஸ்பூன் வினிகர் மற்றும் உப்பு சேர்த்து தவாவில் வதக்குங்கள். வதக்கிய இறாலை மிதமான தணலில் நல்லெண்ணையில் பொறித்தெடுக்கவும்.
வெந்தயத்தை சிறிதளவு வினிகரில் ஊறவைத்து இதனுடன்.கடுகு, சீரகம், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துகொள்ளவும். இந்த கலவையை அரைக்கும்போது தண்ணீருக்கு பதிலாக வினிகரை பயன்படுத்தவும்
ஒரு தாவாவில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, அரைத்த மசாலா,உப்பு, சிறிதளவு வினிகர், பொறித்தெடுத்த இறால் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். மசாலா கலவை நன்றாக வதங்கி, கெட்டிப்பட்டதும் அடுப்பிலிருந்து இறக்கி இறுதியாக சக்கரை சேர்க்கவும்
இறால் மசாலா ஊறுகாய் ஆறியபிறகு, அதனை ஈரமில்லாத பாட்டில்களில் சேமித்துவைக்கவும்.