Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலச்சிக்கல் பிரச்சனை உருவாவதற்கான முக்கிய காரணங்கள் என்ன...?

Webdunia
திங்கள், 23 மே 2022 (17:18 IST)
நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படும். நாளடைவில் அது மலச்சிக்கலை உண்டாக்கும்.


பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அதிக புரத உள்ளடக்கம் இருப்பதால் சில சமயங்களில் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

எண்ணெய் மற்றும் துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது படிப்படியாக மலச்சிக்கல் அபாயத்தை அதிகரிக்கும்.

நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, அதிக காரமான உணவுகளை எடுத்துக்கொள்வது மற்றும் தூக்கமின்மை போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பிரச்சனை உருவாகும்.

தொடர்ந்து மது அருந்துவது உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். இது மலச்சிக்கல் மற்றும் வீக்கத்தை மோசமாக்கும்.

அதிக கொழுப்பு நிறைந்துள்ள உருளைக்கிழங்கு சிப்ஸ் கலோரிகளை மட்டும் அதிகரிப்பதில்லை. அதனுடன் சேர்த்து செரிமான நேரத்தையும் அதிகமாக்கும்.

வலிநிவாரணி மாத்திரைகள் மற்றும் தூக்க மாத்திரைகள் அடிக்கடி எடுத்துக்கொள்ளும்போது அவை செரிமான பாதையை அடைத்து கொண்டு, கழிவுகள் அனைத்தும் வெளியேறுவதை நிறுத்திவிடும். இந்த காரணமாக மலச்சிக்கல் பிரச்சனை உருவாகும்.

தொடர்புடைய செய்திகள்

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உடலுக்கு நன்மை தரும் சுவையான ராகி பாயாசம் செய்வது எப்படி?

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments