இரும்புச்சத்து உடலின் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளை ஏற்படுத்தும்...?

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (17:13 IST)
உடலுக்கு போதிய இரும்புச்சத்து உடலில் இல்லாதபோது, அது இரும்புச்சத்து குறைபாடுள்ள இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது.


இரத்த சோகையைத் தடுப்பதில் இருந்து ஆற்றலையும் கவனத்தையும் மேம்படுத்துவது வரை, இரும்புச் சத்தினால் ஏராளமான நன்மைகள் உள்ளன.

இரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்தும் ஹீமோகுளோபின் என்ற புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்க மனித உடலுக்கு இரும்புச் சத்து தேவைப்படுகிறது.

இரத்த சோகை குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்கவும் தடுக்கவும் இரும்புச் சத்து உதவுகிறது. இது இரத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதன் விளைவாக ஏற்படுகிறது.

சோர்வு, மனநிலையில் மாற்றம், மூச்சுத் திணறல் மற்றும் இதயத் துடிப்பு போன்றவை இரத்த சோகையின் அறிகுறிகள். இரத்த சோகை வராமல் தடுக்க இரும்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இரும்புச் சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. சேதமடைந்த செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஹீமோ குளோபின் அளவை அதிகரிப்பதன் மூலம் இது செயல்படுகிறது.

இரும்புச் சத்துக்கள் தசைகள் மற்றும் மூளைக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. இது உடல் மற்றும் மன செயல்திறன் ஆகிய இரண்டிற்கும் முக்கியமானது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? என்ன ஆபத்து?

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments