Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிக்கடி சாத்துக்குடி பழ சாறு அருந்துவதால் என்ன பயன்கள்...?

Webdunia
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவிற்கு பதிலாக சாத்துக்குடி ஜுஸ் குடித்து வந்தால் உடல் எடை வெகுவாக குறைந்து உடல்  ஆரோக்கியமடையும்.

உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சாத்துக்குடி ஜூஸினை அடிக்கடி எடுத்துக்கொண்டு வந்தால் நீர்ச்சத்து அதிகரித்து உடல் புத்துணர்வுடன் காணப்படும். நீர்க்கடுப்பு பாதிப்பு உள்ளவர்கள் சாத்துக்குடி பழத்தினை சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு சரியாகிவிடும்.
 
உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய அடிக்கடி சாத்துக்குடி பழ ஜூஸினை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நன்மை தரும். மஞ்சள்காமாலை நோயால்  பாதிக்கப்பட்டவர்கள் இப்பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் எளிதில் செரிமானம் அடைந்து உடல் புத்துணர்வு பெரும்.
 
மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள் சாத்துக்குடியை அதிக அளவில் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படாது. சாத்துக்குடியை அதிக அளவில் சாப்பிடுவதால் முகம் பொலிவடைந்து முகம் பளிச்சிடும்.
 
சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் அதில் உள்ள சத்துக்கள் எலும்பு தேய்மானத்தை தடுத்து, எலும்புக்கு வலு சேர்க்க உதவுகிறது. சாத்துக்குடி ஜீரண சக்தியை  அதிகரித்து, பசி உணர்வை தூண்டுகிறது.
 
சாத்துக்குடியில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரக பையில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகத் தொற்று நோய் உருவாகாமல்  தடுக்கும்.
 
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பயன்படுகிறது. சாத்துக்குடிப் பழச்சாற்றைத் தலையில் தேய்த்து குளித்துவந்தால் மென்மையானக் கூந்தலைப்  பெறமுடியும். தலைமுடியின் வலிமையை அதிகரிக்கும், நரைமுடியை நீக்கி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

கோடையில் வதைக்கும் நீர்க்கடுப்பு.. இதை செய்தால் 10 நிமிடத்தில் சரியாகும்!

கோடையை குளிர்விக்கும் சூப்பர் ரோஸ்மில்க் ஈஸியா செய்யலாம்..!

1500 கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் இந்தியாவின் மிகப்பெரிய விழித்திரை கருத்தரங்கு: ரெட்டிகான் 2024!

பலாப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

வெற்றிலை போடுவதால் நன்மையா? தீமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments