Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரம்பு தளர்ச்சியை நீக்கி வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

Webdunia
வல்லாரையை வாரம் ஓருமுறை கீரையாக சமைத்து குழந்தைகளுக்கு கொடுக்க, ஞாபக சக்கதி அதிகரிக்கும். புத்தி கூர்மை உண்டாகும். சுறுசுறுப்பாக இருப்பார்கள். படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

வல்லாரை இலை சாறு மற்றும் தூதுவாளை இலைசாறு இரண்டையும் கலந்து 5 மி.லி அளவு எடுத்து அருந்திவர நூரையீரல் வலுபடும். நூரையீரலில் தேங்கியுள்ள சளி வெளியாகும். இருமல், சளி சம்மந்தமான பிரச்சனைகள் சரியாகும்.
 
வல்லாரை இலை , உத்தாமணி இலை மற்றும் மிளகு சிறிது சேர்த்து அரைத்து, குன்றிமணி அளவு மாத்திரைகளாக செய்து நிழலில் காயவைக்க வேண்டும். காய்ச்சல் இருப்பவர்கள் இந்த மாத்திரையை காலை மாலை என இருவேளை உண்டுவர காய்ச்சல் குணமாகும்.
 
நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் வல்லாரை கீரையை வாரம் இருமுறை சமைத்து உண்ண நரம்பு தளர்ச்சி நீங்கி நரம்புகள் பலம் பெறும். 
 
வல்லாரை இலை மற்றும் கீழாநெல்லி இலையை சம அளவு எடுத்து அரைத்து சுண்டக்காய் அளவு எடுத்து தயிரில் கலந்து உண்ண நீர் எரிச்சல் குணமாகும்.
 
அரிசி திப்பிலியை வல்லாரை சாற்றில் ஊறவைத்து காயவைக்க வேண்டும் . இதைபோல் 7 முறை ஊறவைத்து காயவைக்க வேண்டும். பின்பு இந்த திப்பிலியை பொடிசெய்து உண்டுவர மூளை சுறுசுறுப்பாக செயல்படும் உடல் வலிமை பெறும்.
 
வல்லாரையை கீரையாக நாம் உண்டு வந்தோமானால் ஞாாபக சக்தி  அதிகரிக்கும்,  நரம்பு தளர்ச்சி நீங்கி நரம்புகள் வலுபெறும், தோல் நோய்கள் சரியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி பயன்படுத்துங்கள்.. கருப்பட்டியால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments