Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க உதவும் தக்காளி !!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (14:58 IST)
இரத்தத்தை சுத்தமாக்கும். எலும்பை பலமாக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தோலை பளபளப்பாக்கும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பற்களும், ஈறுகளும் வலிமை பெறும். மலச்சிக்கலை நீக்கும். குடற்புண்களை ஆற்றும். களைப்பைப் போக்கும்.


ஜீரண சக்தியைத் அதிகரிக்கும். சொறி, சிரங்கு, போன்ற தோல் நோய்களைப் நீக்கும். தொற்று நோய்களைத் தவிர்க்கும். வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றும். கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும். உடல் பருமனை குறைக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு தக்காளி.

தக்காளிப் பழத்தில் இல்லாத சத்துக்களே இல்லை. இதில் வைட்டமின் ஏ, பி, சி, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து அதிகளவு உள்ளது. கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்து இதில் அதிகளவில் நிரம்பியுள்ளது. அதேபோல் வைட்டமின் கே சத்தும் அரிதான ஒன்று. இதுவும் தக்காளியில் நிறைந்துள்ளது.

தக்காளி ஜூசை வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தக்காளி சூப் செய்து பருகினால் சோர்வும், களைப்பும் நீங்கி விடும்.

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

தக்காளியில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள், நமது உடலின் இன்சுலின் அளவையும், கொழுப்பின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள அதிகப்படியான ஆன்ட்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் விட்டமின் C யானது மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழைக்காய் உணவில் சேர்ப்பதால் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

புதினாவை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments