Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆண்மை பெருக

ஆண்மை பெருக
, புதன், 25 நவம்பர் 2015 (15:59 IST)
சித்த வைத்திய குறிப்புகளில் ஆண்மை பெருக பல வழிமுறைகள் உள்ளது.


 

 
1. சுரக்காய் விதைகளை பவுடராக்கி கொள்ள வேண்டும். 5 கிராம் பவுடர், கருப்பட்டி சேர்த்து தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர ஆண்மை கூடுதலாகும்.
 
2. பேரீச்சம் பழத்தை ஆட்டு பாலில் ஊறவைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்து சாப்பிட ஆண்மை பெருகும்.
 
3. தூக்கத்தில் இந்திரியம் தானாக வெளியேறுவதைத் தடுக்க கீழாநெல்லி இலை, அம்மான் பச்சரிசி இலை இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து காலையில் 5 கிராம் மாலையில் 5 கிராம் என எடுத்து எருமை தயிரில் தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர சக்தி வீனாக வெளியேறாது.
 
4. ஆண்களுக்கு விந்து கூடுதலாக, அமுக்கிராங்கிழங்கை பவுடராக்கி தினசரி 5 கிராம் தூள், பனங்கற்கண்டு சேர்த்து பாலில் காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர விந்து கூடும்.  தேகம் புஷ்டி ஆகும்.  அழகு கொடுக்கும்.  தோல் வியாதி இருந்தாலும் குணமாகும்.
 
5.  தாது புஷ்டியடைய நிலப் பனங்கிழங்கு உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது. இதனால் உஷ்ணம் , சுரம்  , மூலம் இவைகள் நீங்கும் .
 
6.ஓரிதழ்த் தாமரை சுக்கிலத்தையும் , அழகையும் உண்டாக்கும்.இதைத் தினம் உண்ண வெள்ளை , வெட்டை , நீர்ச்சுருக்கு , நீரெரிச்சல் முதலிய மேக சம்பந்தமான பிணிகள் நீங்கும். மோரில் கலக்கி உண்ண கிரகணி முதலிய நோய்கள் தீரும்.
 
7. நெருஞ்சில் விதைக்கு மூத்திரக்கட்டு , சதையடைப்பு , கல்லடைப்பு முதலியவை நீங்கும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள மூலிகைகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும் .
 
8. நீர்முள்ளி விதைகள் சிறு நீரைப் பெருக்கும்.சப்த தாதுக்களையும் விருத்தி செய்யும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள நீர்முள்ளி விதை, ஆண்மைத் தன்மையை பெருக்கும் .நீர்முள்ளி விதைக்கு பிரமேகம் , அதிசாரம் , சுபசோபை , ஆயாசம் இவை நீங்கும்.சுக்கிலமும் விருத்தியாகும்.
 
9. தூக்கம் வராமல் சிரமப்படுவோருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் ஜாதிக்காய்த் தூள் சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட தூக்கம் வரும் நரம்புவலுப்படும். சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், அந்தரங்க வாழ்வில் சிறப்பான பலன்கள் கிட்டும்.
 
10. முருங்கைப் பூவை பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும். கண் எரிச்சல், நாக்கு கசப்பு, நீர் ஊறுதல் தீரும்.  பூவைப் பாலில் போட்டு இரவு காய்ச்சிக் குடித்தால் ஆண்மை மிகும்.
 
ஆண்மைக்குறைபாடு மட்டும் நீக்காமல் , இலவச இணைப்பாக உடலின் அனைத்து வகையான வியாதிகளையும், சீர்செய்யும். இந்த அற்புத மூலிகை மருந்தை முறையாக பயன்படுத்தி, சிறப்பாக வாழலாம்.

Share this Story:

Follow Webdunia tamil