Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்சர் போன்ற வயிற்று புண்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும் தண்ணீர் விட்டான் கிழங்கு !!

Webdunia
தண்ணீர் விட்டான் கிழங்குகள் பல்வேறு நம் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. இது நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.

இதற்கு சாத்தாவாரி, சதாவேரி, நீர்வாளி, நீர்விட்டான், வரிவரி, சதாமூலம், தண்ணீர் விட்டான், நாராயண முலி, சதாவேலி, சதமுலை, உதக மூலம், சீக்குவை, பறனை, பீருதந்தி என வேறு பல பெயர்களும் உள்ளன. இதன் தண்டு, வேர், இலை, கிழங்கு ஆகிய அனைத்துமே மருத்துவ குணம் கொண்டதாகும்.
 
தண்ணீர் விட்டான் கிழங்கை பயன்படுத்தினால் சிறுநீர் சம்மந்தமான பிரச்சனைகள் குணமாகும். நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.
 
ரத்தத்தை சுத்திகரித்து நல்ல தூக்கத்தை தரக் கூடியது. குடல் வலி, வயிற்றுப் போக்கு, பசியின்மை போன்ற அனைத்தையும் குணமாக்க கூடியது. இது வெள்ளை வெட்டு நோய் தொந்தரவுகளில் இருந்து நம்மை காக்கும். பித்தம், எலும்புருக்கி நோய், நாள் பட்ட காய்ச்சல் ஆகிய அனைத்துப் நோய்களையும் குணமாக்கும்.
 
இது உடல் உள்உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் புண்களை ஆற்றுகிறது. அல்சர் போன்ற வயிற்றுப் புண்களுக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு மிகச்சிறந்த மருந்து ஆகும்.
 
தண்ணீர் விட்டான் கிழங்கு வேர்த்தூளை, ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனைப் பசுவின் நெய்யோடு சேர்த்து நாள் ஒன்றுக்கு காலை, மாலை என இரு வேளைகள் உட்கொண்டு வந்தால் சோர்வு நீங்கி உடல் நன்கு பலம் பெறும்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments