சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.
1. குப்பைமேனி இலை 1 கைப்பிடி, 1 கரண்டி சீரகம் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிட்டால் ஒரே வேளையில் கூட ரத்தபோக்கு நின்று விடும்.
2. சர்க்கரை நோய் குணமாக, வேப்பம்பூ, நெல்லிக்காய் பவுடர், துளசிபவுடர், நாவல் கொட்டை பவுடர் சேர்த்து தினசரி 1/2 ஸ்பூன் சாப்பிட்டு வர 3 மாதத்தில் நீரழிவு குணமாகும்.
3. வாய்ப்புண் குணமாக, நெல்லி இலைகளை அவித்து வடிகட்டி அந்த நீரினால் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் வெகு சீக்கிரம் குணமாகும்.
4. சீதபேதி குணமாக, வாழைப்பூவை கன்னன் நீக்கி, அவித்து கசக்கி சாறு எடுத்து காலையில் 15 மில்லி சாப்பிட சீதபேதி குணமாகும்.
5. மூக்கு சம்பந்தமான நோய் குணமாக, நாயுறுவி செடி விதைகளை பொடி செய்து உட்கொண்டால் மூக்கு சம்பந்தமான நோய் குணமாகும்.