தொண்டை சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தரும் மிளகுத்தூள்...!!

Webdunia
வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல் ஏற்படும். அந்த வேளையில் மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்து வந்தால்
செரிமானத்தை சீராக்கும்.

 
மழைக் காலத்தில் தும்மல், சளி பிரச்சனை அதிகரிக்கும் போது கொஞ்சம் மஞ்சள்தூளுடன் மிளகுத்தூளை சேர்த்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரண்டே நாளில் தும்மல், சளி பிரச்சினை சரியாகும்.
 
மிளகை பொடி செய்து நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி, அந்த நீரைக் குடித்து வந்தால் கபம் சரி ஆகும். தொண்டைக் கட்டு, பல் வலி போன்ற பிரச்சினை அதிகமாக இருந்தால், மிளகுத்தூளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு வாய்க் கொப்புளித்து வந்தால் நல்ல தீர்வு காண முடியும்.
 
ஈரல் நோய் எனப்படும் வைரல் ஹெப்படைடிஸ் பிரச்சனை இருப்பவர்கள் மிளகு, சுக்கு, திப்பிலி மூன்றையும் சம அளவு சேர்த்து வறுத்துப் பொடி செய்து கொண்டு,  காலை, மாலை என இருவேளை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.
 
பொடுகு மற்றும் தலைமுடி உதிர்வு பிரச்சினை உள்ளவர்கள் மிளகைப் பாலில் சேர்த்து அரைத்து தலைக்கு தடவி, ஊறவைத்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு பிரச்சனை தீரும் மற்றும் தலை முடியும் நன்கு வளரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நோயை போக்கும் கத்திரிக்காய்!.. இவ்வளவு பலன்களா?!.. வாங்க பார்ப்போம்!...

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை நேரடியாக சாப்பிடலாமா? தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாமா?

காலிபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் எவை எவை?

ஓவர் மேக்கப்பால் சருமத்திற்கு பிரச்சனையா? இதை செய்தால் போதும்..!

பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments