Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நொச்சி தாவரத்தின் அற்புத மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்...!!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (11:27 IST)
நொச்சி தாவரத்தில் இலைகள் மிகவும் அவசியமானவை. இதில் கருநொச்சி, நீலநொச்சி வெண்ணொச்சி என்று பல வகைகள் உள்ளன. 

கீல் வாதம், முக வாதம் போன்ற கடுமையான வாத நோய்கள் மண்டைக் குடைச்சல் ஆகியவற்றிற்குச் செய்யப்படும் மருந்துகளில் கருநொச்சி சிறப்பாக கருதப்படுகிறது.
 
நொச்சிச் செடி இருக்கும் இடங்களில் நோய்களைப் பரப்பும் கொசுக்களும் பூச்சிகளும் இருக்காது. நொச்சி துவர்ப்பு சுவை கொண்டது. 
 
வெப்பத் தன்மையுடையதாக இருந்தாலும், அசதியைத் தணிக்கும், சிறுநீரைப் பெருக்கும், காய்ச்சலைப் போக்கும், ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும்.
 
குடலில் ஏற்படும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கும் திறன் கொண்டது நொச்சி இலை, மாதவிடாய், கர்ப்பகாலப் பிரச்சனைகள், சினைப்பை நீர்க்கட்டிகள் போன்றவற்றுக்கும் நிவாரணம் வழங்குகிறது.
 
ஒரு தேக்கரண்டி நொச்சி இலை சாற்றில் 1 கிராம் மிளகுத் தூள் சிறிதளவு, நெய் சேர்த்து, காலை மாலை வேளைகளில் சாப்பிட்டுவந்தால் மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும்.
 
ஒரு பிடி நொச்சி இலைகளை 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து நீராவி பிடித்தால், தலை பாரம் குறைந்து விடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதுகு வலி: காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் - முழுமையான வழிகாட்டி!

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது?

எக்சிமா தோல் நோய்: அறிகுறிகள், காரணங்கள், தீர்வுகள்!

சி.டி.எஸ் சிறப்பு மருத்துவமனையில் ரோபோடிக் முழங்கால் அறுவை சிகிச்சை!

அவித்த முட்டையின் ஊட்டச்சத்துக்கள்: ஒரு முழுமையான பார்வை!

அடுத்த கட்டுரையில்
Show comments