Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்ட கோரைக்கிழங்கு !!

பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்ட கோரைக்கிழங்கு !!
கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும், விதை மூலமும் உற்பத்தியாகும். இந்த கோரை கிழங்கில் பல விதமான மருத்துவ குணங்கள் உள்ளன.

முகச்சுருக்கம் நீங்க கோரை கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, சந்தன பொடியுடன் பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசி சுமார் 10 நிமிடங்களுக்கு  பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர முகச்சுருக்கம் சரியாகும்.
 
பல்வேறு நன்மைகளை கொண்ட கோரைக்கிழங்கு தோல்நோய்களை குணப்படுத்துகிறது. தோலுக்கு மென்மை, பொலிவு கொடுக்கிறது. மேலும் முகப்பரு வராமல் தடுக்கும். மருக்கள் விலகிபோகும். வியர்வை நாற்றத்தை போக்குகிறது.
 
கோரை கிழங்கு 5 கிராம் வரை எடுத்து இதனுடன் கால் ஸ்பூன் சுக்குப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவேண்டும். இதை வடிகட்டி குடித்துவர காய்ச்சல் தணியும்.
 
உடல் வலியை போக்கும் கோரை கிழங்கு தைலங்களில் மணத்துக்காக சேர்க்கப்படுகிறது. ரத்தவட்ட அணுக்களை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டது. காயவைத்த கோரை கிழங்கு, பொடி ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
 
கோரை கிழங்கு பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்குகிறது. சிறுநீரை பெருக்க கூடியதாக விளங்குகிறது. மேலும் வெள்ளைபோக்கு, இடுப்பு வலி, அடி வயிற்று வலி, கருப்பை புண்களை போக்கும் மருந்தாக விளங்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும் முட்டைகோஸ் எப்படி தெரியுமா...?