Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலை தாக்கும் நோய்களை விரட்டி அடிக்கும் கற்பூரவள்ளி இலை !!

Webdunia
கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கை குறையும்.

கற்பூரவள்ளியில் வைட்டமின் கே ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் கே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும்.
 
கற்பூரவள்ளி முதுமைத் தோற்றத்தை தடுப்பதோடு பல சரும நோய்களையும் எதிர்க்கும். கற்பூரவள்ளி இலைகளில் டயட்டரி நார்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
 
சளி, காய்ச்சல், அடிவயிற்று வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கற்பூரவள்ளி இலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
 
கற்பூரவள்ளி இலைகளில் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதயத் துடிப்பைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்.
 
நெஞ்சு சளி பிரச்சனை உள்ளவர்கள் ஒரு டம்ளர் நீரில் கற்பூரவள்ளி எண்ணெய் 3 துளிகள் கலந்து குடிக்கவேண்டும். இவ்வாறு 4-5 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது அஜீரண கோளாறுகளை சரி செய்யும்.

தொடர்புடைய செய்திகள்

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

வியர்வை நாற்றத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments