Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகளை நீக்கும் கற்பூரவள்ளி !!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (09:35 IST)
கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைக்க உதவுகிறது.


கற்பூரவள்ளி இலை அஜீரண கோளாறுகளைத் போக்கும். சில வகையான உணவுகளை சாப்பிடுவதாலும்,நேரங்கடந்து சாப்பிடுவதாலும் அஜீரண பிரச்சனை ஏற்படுகிறது. இப்படிபட்ட சமயங்களில் கற்பூரவள்ளி இலை சாற்றினை அருந்தினால் உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்து அஜீரண கோளாறுகளைத் போக்கும்.

கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய்களின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.

கற்பூரவள்ளி இலையில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன.

கற்பூரவள்ளி இலையை சாப்பிட்டு வந்தால் ப்ரீ ராடிக்கல்ஸ்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து சிறுவயதில் ஏற்படும் முதுமைத் தோற்றத்தை தடுக்கிறது.

கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த இலையின் சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். அந்த இல்லை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.

கற்பூரவள்ளி இலையை சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே சமயத்தில் இதய வால்வு மாற்று சிகிச்சை, பெருந்தமனி ஒட்டு சிகிச்சை! - சிம்ஸ் மருத்துவமனை சாதனை!

பிரிட்ஜ் எல்லாம் வேண்டாம்.. மண்பானை தண்ணீர் குடித்தால் இவ்வளவு பயன்கள் இருக்குது..!

இரட்டை நுரையீரல் மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து காட்டிய ரேலா மருத்துவமனை!

காலை எழுந்தவுடன் இந்த 7 செயல்களை செய்யுங்கள்.. நோயே வராது..!

அடுத்த கட்டுரையில்
Show comments