Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்னீர் பூ எதற்காக எவ்வாறு பயன்படுகிறது...?

Webdunia
பன்னீர் பூ பார்ப்பதற்கு சுண்டைக்காய் போல் இருக்கும், இந்த பன்னீர் பூவானது சொலனேசி என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. 

ஆயுர்வேத பயன்பாட்டில் இதன் பங்கு அதிகம் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ள இந்த பன்னீர் பூ எளிதாக மூலிகை கடைகளில் கிடைக்க கூடியது. 
 
குறிப்பாக இது இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. தூக்கமின்மை நரம்பு சோர்வு, ஆஸ்துமா மாற்று நீரிழிவு நோய்களை எதிர்த்து போராடும் தன்மை இதற்கு  உண்டு.
 
பன்னீர் பூ கணையத்தில் உள்ள பீட்டா செல்களை குணப்படுத்தி, இன்சுலின் பயன்பாட்டை சரிசெய்கிறது. இது பீட்டா செல்களை சரி செய்வது மட்டுமல்லாமல், இன்சுலின் சுரப்பதற்கும் உதவுகிறது. மேலும் டைப்-2 நீரிழிவானது இன்சுலின் சுரப்பதை தடுக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த பன்னீர் பூவானது இயற்கை மருந்தாக செய்லபடுகிறது. 
 
குறிப்பிடத்தக்க வகையில் இந்த காய்களை பீங்கான் கப்பில் மட்டுமே ஊறவைக்க வேண்டும். இதில் கசப்பு தன்மை அதிகம் இருப்பதால் நீங்கள் தினமும் குடிக்கும்  டீ கப்பை பயன்படுத்துவது சிறந்தது. ஊற வைப்பதற்கு அறை கப் தண்ணீர் போதும்.  
 
முதல் கட்ட சர்க்கரை நோய்க்கு 3 இல் இருந்து 4 காய்கள். இரண்டாம் கட்ட சர்க்கரை நோய்க்கு 7 இல் இருந்து 8 காய்கள். தினமும் இரவில் ஊறவைத்து காலையில் ஊறிய காயை வடிகட்டியில் வடித்து அந்நீரை வெறும் வயிற்றில் குடித்து வர இரத்தத்தில் சர்க்கரையின் அளவு படிப்பு படியாக குறைந்து விடும்.

தொடர்புடைய செய்திகள்

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments