Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் பூண்டு !!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (18:23 IST)
உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தால் உடல் சோர்வு, உடல் பலவீனம், மனச் சோர்வு போன்றவை ஏற்படும். பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் உடலுக்கு மிகுந்த நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கிறது. இதனால் உடலும் மணமும் புத்துணர்ச்சி அடைகிறது.


தாய்பால் அதிகம் சுரக்க சுரக்க பூண்டை வேகவைத்து பாலில் கலந்து சாப்பிடுவார்கள். பாலில் பூண்டை ஊறவைத்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். உடல் எடை குறைய விரும்புபவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டை மென்று சாப்பிட்டால் தொப்பை படிப்படியாக குறைவதோடு கணிசமாக உடல் எடையும் குறையும்.

சளி தொந்தரவு கொண்டவர்கள் பாலில் நான்கு பூண்டு பற்களைச் சேர்த்து குடித்துவந்தால் நெஞ்சில் உள்ள சளி இளகி கழிவில்  வெளியேறும். காச நோய் உள்ளவர்களுக்கும் இது சிறந்த மருந்து. பூண்டில் இருக்கும் ஈதர் நுரையீரல் குழாயில் கெட்டியான சளி அடைத்திருந்தால் அதைக் கரைத்து வெளியேற்றும்.

சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் சாப்பிட்டும் கட்டுக்குள் வராமல் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலின் இன்சுலின் சுரப்பு அதிகரித்து சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

இரத்தத்தில் நச்சுக்கள் சேரும் போது உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். அவ்வாறானவர்கள் பூண்டை உணவில் சேர்த்து கொண்டால் இரத்தத்தில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறுவதோடு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பையும் கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments