Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடைக்கால கரும்புள்ளிகளை போக்க எளிதான அழகு குறிப்புகள்!

Prasanth Karthick
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (13:24 IST)
கோடைக்காலம் வந்தாலே சரும பிரச்சினைகளும் உண்டாகி பெரும் சோதனைக்கு உள்ளாக்குகின்றன. ஆனால் வீட்டில் உள்ள மருத்துவகுணம் கொண்ட பொருட்களை கொண்டே சரும பிரச்சினையை தடுக்க முடியும்.



கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது, இதனால் வெயிலில் பல இடங்களுக்கும் அலைய வேண்டியிருப்பவர்களுக்கு கரும்புள்ளிகள் உள்ளிட்ட சரும பிரச்சினைகள் தோன்றும் வாய்ப்புகள் உள்ளது.

அவ்வாறு கரும்புள்ளிகள் தோன்றினால் கீழ்கண்ட குறிப்புகளை பின்பற்றி கரும்புள்ளிகளை போக்கி சருமத்தை அழகாக பராமரிக்க முடியும்.

எலுமிச்சை சாறுடன் ரோஸ் வாட்டர் கலந்து காட்டன் துணியில் நனைத்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 5 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர கரும்புள்ளிகள் மறைந்து சருமம் பொலிவடையும்.

பப்பாளி பழத்தை தோல், விதை நீக்கி மசித்துவிட்டு அதனுடன் தேன் கலந்து குழைத்து முகத்தில் பூசி வர கரும்புள்ளிகள் மறைவதோடு முக அழுக்குகள் நீங்கி பொலிவு தரும்.

கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் ஜாதிக்காயை அரைத்து குழைத்து வைத்து வர ஒரு வாரத்தில் கரும்புள்ளிகள் மறைய தொடங்கும்.

முகத்தில் வெண்ணெய் தடவி, வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து ஆவி பிடித்து முகத்தை கழுவி வர முகச்சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறையும்.

Edit by Prasanth.K

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: சுவையான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

'சைவ ஆட்டுக்கால்' முடவாட்டுக்கால் கிழங்கு: மருத்துவப் பயன்களும், எச்சரிக்கையும்

தேங்காய் எண்ணெயும் அரிசியும்: சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த புதிய வழி

நமது உணவின் இரகசியம்: புறக்கணிக்கப்படும் கறிவேப்பிலையின் முக்கியத்துவம்

உடல் பருமன் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை: பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

அடுத்த கட்டுரையில்
Show comments