Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்குமா சீத்தாப்பழம்...?

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (17:24 IST)
சீத்தாப்பழம் பழவகைகளில் தனிப்பட்ட சுவையும், மணமும் உடையது. குளுகோசும், சுக்ரோசும் சம அளவில் இருப்பதால் அதிக இனிப்பு சுவையை தருகிறது. நினைவாற்றலை அதிகரிக்கும், இதில் உள்ள சத்துக்கள் இதயத்தை சீராக இயங்க உதவுகிறது.

காசநோயை குணமாக்கும், குடல் புண்களை குணமாக்கும். உடல் சோர்வை போக்கும். சீத்தாப்பழம் இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
 
ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த சக்தியை தரும் டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் இதன் இலை, தோல், விதை, மரப்பட்டை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
 
சீத்தா இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இதன் இலை அருமருந்தாகும். இலைகளை அரைத்து புண்களுக்கு மேல் பூசி வர உடனடியாக குணமாகும். பூண்டுடன் சீத்தாப்பழத்தை சேர்த்து அரைத்து தேமல் மீது பூசிவர தேமல் மறையும்,
 
பாசிப்பயறு, வெந்தயம் இரண்டையும் இரவில் ஊறவைத்து காலையில் அரைத்து அதில் சீத்தா விதை பொடியை சேர்த்து கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து பிறகு குளித்து வர பொடுகு மறையும்.
 
சீத்தாப்பழச்சாறு அருந்தி வர சரும வறட்சி நீங்கும். நரம்புகள் வலுவடையும். இதில் வைட்டமின் சி கணிசமான அளவு இருப்பதால் சளி பிடிக்காமல் தடுக்கிறது. சளி பிடித்தவர்கள் சாப்பிட்டாலும் சளியை குணமாக்கும், வேறு பாதிப்புகளை தராது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments