Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணி இலையில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா...?

Webdunia
சனி, 7 மே 2022 (12:40 IST)
பிரியாணி இலை நறுமணத்திற்காக சேர்க்கப்படுவது என்று நினைப்போம். ஆனால் பிரியாணி இலையின் நிறைய மருத்துவ குணம் நிறைந்துள்ளது.


ஆன்ட்டி பாக்டீரியா பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு அழற்சி போன்ற பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும். ஆன்டி-ஆக்சிடன்ட்கள், கனிமச்சத்துக்கள் பொட்டாசியம் கால்சியம், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்பு சத்துக்கள் போன்றவற்றை அதிகம் நிறைந்துள்ளன.

உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை நீக்க இந்த பிரியாணியை உதவுகிறது. வீக்கத்தை குறைக்க இந்த இலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மூட்டு வாதம் ஏற்படும் சாத்தியத்தை குறைக்கிறது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து அதை வெளியேற்றி புற்றுநோயிலிருந்து அபாயத்தில் இருந்து பாதுகாக்கின்றது.

பிரியாணி இலை டைப்-2 நீரிழிவிற்கு நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரித்து, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும். எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை உணவில் சேர்த்து வருவது நல்லது.

தொடர்ந்து இந்த பிரியாணி இலையை சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுவதும் நிற்கும், பிரியாணி இலையை நன்கு வேகவைத்து அதன் தண்ணீர் நன்கு ஆறியதும் தலையை கழுவினால் முடி உதிர்வது நிற்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

உடலுக்கு தேவையான புரதச் சத்துக்கள் உணவுகள் என்னென்ன?

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?

ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன்? குணப்படுத்த என்ன வழிகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments