Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த நோய்களுக்கு வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்துவது தெரியுமா...?

Webdunia
வெந்தயத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் முடி கொட்டாது, சீக்கிரத்தில் நரை வராது. அத்துடன் முடியும் நன்றாக வளரும்.

* தீக்காயத்திற்கு வெந்தயத்தை ஊறவைத்து விழுதாக அரைத்து பற்றுப் போட்டால் சீக்கிரத்தில் குணம் கிடைக்கும். அவுரி இலையுடன் சிறிது வெந்தயம் மிளகு சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் பூரான் கடி விஷம் முறியும்.
 
* தினசரி 15 கிராம் வெந்தயத்தை தவறாமல் உண்டு வந்தால், ரத்த அழுத்தம் சீராகும், ரத்தம் சுத்தமாகும், ரத்தத்தில் உள்ள கொழுப்பும் குறையும். 
 
* வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து சீயக்காய் போல தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
 
* வாயுத் தொல்லை உள்ளவர்கள் தினமும் காலையில் பல் விளக்கியதும் ஒரு தேக்கரண்டி வறுத்துப் பொடித்த வெந்தயப் பொடியைச் சாப்பிட்டால் வாயு  வெளியேறிவிடும்.
 
* வெந்தயத்தையும், நெல்லி இலையையும் சேர்த்து எட்டு மணி நேரம் ஊற வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் சீதபேதி நிவர்த்தியாகும். ஜீரண சக்தி அதிகரித்து உடல் எடையும் குறையும். 
 
* பச்சை வெங்காயத்துடன், ஊற வைத்த வெந்தயத்தை சேர்த்து சாப்பிட்டு வர விந்து உற்பத்தி அதிகரிக்கும். ஒரு துண்டு இஞ்சியுடன் சிறிது வெந்தயம் வைத்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! - புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

அடுத்த கட்டுரையில்
Show comments