Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலின் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும் செலரி...!!

Webdunia
செலரியில் அதிகளவிலான பாலிஃபீனால் என்னும் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் உள்ளது. இவையும் கண்களுக்கு மிகவும் நல்லது. இரவு தூங்கும் முன் சிறிது செலரியை சாப்பிடுவதால் உடனடியாக நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.

தினமும் சிறிது செலரி சாப்பிடுங்கள். இதில் உள்ள ப்தலைடுகள், இரத்த ஓட்டத்தை குறைந்தது 14% மேம்படுத்தும் மற்றும் இரத்தத்தில் உள்ள மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைத்து, உடலினுள் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
 
ஒரு நாளைக்கு 2 தண்டு செலரியை சாப்பிட்டால், 7% கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க முடியும். ஆகவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், அன்றாட  உணவில் செலரியை சேர்ப்பது மிகவும் நல்லது.
 
புற்றுநோய், நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, தொண்டை தொடர்பான நோய்கள் ஆகியன குணமாகச் செலரி சூப் அருந்த வேண்டும். மேலும் சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்கவும் இத்தண்டு பயன்படுகிறது.
 
இதயமும், இதயத்திற்குச் செல்லும் நரம்புகளும் தடையின்றி இயங்க மக்னீசியம் கூடுதலாகத் தேவை. அந்தத் தேவையை செலரியில் உள்ள மக்னீசிய உப்புகள் பூர்த்தி செய்துவிடுகின்றன.
 
உணவு நிபுணர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் செலரி ஜூஸ் குடிப்பதால் நல்ல பலனைத் தரும் என்று தெரிவிக்கின்றனர். காலை மட்டும் இல்லாமல்  சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்போ அல்லது பின்போ கூட குடிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரவு உணவை எப்போது எடுக்க வேண்டும்?

IIRSI 2025 மாநாடு: மொரிஷியஸ் அமைச்சர் அனில் குமார் பச்சூ, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்!

மாதுளை தோலின் மகத்துவங்கள்: தூக்கி எறியும் முன் யோசியுங்கள்!

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள்?

நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? பயனுள்ள டிப்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments