Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமிர மோதிரம் மற்றும் காப்பு அணிந்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

Webdunia
ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு குணப்படுத்தும் குணம் உள்ளது. ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒவ்வொரு வகையில் உதவும்.


அனைத்து உலோகங்களை  விடவும் மிகவும் பழமைவாய்ந்த உலோகம் என்றால் அது தாமிரம்தான். இது இரத்தத்தை சுத்தம் செய்வதுடன் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். 
 
தாமிரத்தை அணிவது மட்டுமின்றி அந்த பாத்திரத்தில் சாப்பிடுவதும் கூட உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதுடன் உங்களை தொற்றுநோய்களில்  இருந்து பாதுகாக்கும். இந்த காப்பர் சாஸ்திரரீதியாகவும் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும்.
 
காப்பர் மோதிரம் அணிவது கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. விரல்களில் செம்பு மோதிரம் அணிவது உங்கள் உடலில் நச்சுப்பொருட்களின் அளவு அதிகரிப்பதை குறைக்கும். மேலும் இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
 
வாஸ்து சாஸ்திரத்தின் படி செம்பு மோதிரம் அணிவது உங்கள் வீட்டின் வாஸ்துவை சிறப்பானதாக மாற்றும். இது உங்கள் வீட்டின் சூழ்நிலையை சுத்தமாக  வைத்திருப்பதுடன் உங்கள் வீட்டிற்குள் இருக்கும் நேர்மறை சக்திகளை அதிகரிக்கவும் செய்கிறது.
 
சூரிய மண்டலத்திலேயே சூரியன்தான் மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரமாகும். இது உங்கள் மீது நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தும், கெட்ட விளைவுகளையும்  ஏற்படுத்தும். செம்பு மோதிரத்தை அணியும் போது அது உங்களின் தனிப்பட்ட நேர்மறை சக்தியை அதிகரிப்பதுடன் சூரியனால் ஏற்படும் கெட்ட பாதிப்புகளை  தடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலில் இருக்கும் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு.. இரண்டின் வேலைகள் என்ன?

தூக்கம் வரவில்லை என்றால் தூக்க மாத்திரை வேண்டாம்.. இதோ இயற்கையான சில பொருட்கள்..!

முகம் பளிச்சென மாற வேண்டுமா? கடுக்காய் பொடி ஒன்று இருந்தால் போதும்..!

கோதுமை மாவு ஒன்று போதும் சருமம் மென்மையாக.. ஆச்சரிய தகவல்..!

உடல் எடை குறைப்பிற்காக தனி ‘நலம்’ க்ளினிக்! எம்ஜிஎம் ஹெல்த்கேர் தொடங்கியது!

அடுத்த கட்டுரையில்
Show comments