Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீரக தண்ணீர் தொடர்ந்து குடித்து வருவதால் உண்டாகும் நன்மைகள் !!

Webdunia
சீரகத் தண்ணீரை கர்ப்பிணிப் பெண்கள் குடித்து வந்தால் சுகப் பிரசவம் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கும். 

6 மாதக் குழந்தைகள் முதல் அனைவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டால் சீரகத் தண்ணீரை வயதிற்கேற்ப கொடுத்துவரலாம்.
 
சுகப் பிரசவம் நிகழ்ந்த பின்னரும் பாலூட்டும் தாய்மார்கள் சீரகத்தினை அதிக அளவு எடுத்துக் கொண்டால் பால் அதிகம் சுரக்கும். மேலும் ஆஸ்துமா, சளி, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் சீரகத்தில் டீ போட்டு குடிக்கலாம்.
 
பித்தம், கபம் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் சீரகத்தினை சாதத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். தினமும் காலையில் சீரக டீ குடித்து வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். மேலும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் சீரகத் தண்ணீரைக் குடித்து வர வேண்டும்.
 
சீரகத்தை உணவில் சேர்ப்பதால் அதன் சுவை கூடுவதோடு உடலுக்கும் வலு சேர்க்கிறது. 1 கப் நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை அருந்துவதால் அது பல உடல் உபாதைகளை நீக்குகிறது. 
 
செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் சீரகத் தண்ணீரைக் குடித்தால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, மலச் சிக்கல், வாயுத் தொல்லை போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடிக்கடி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

ஆரோக்கியமான சுவையான மாம்பழ கேசரி செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்!.

ஆண்மை குறைபாடு, நீரிழிவு பிரச்சனையை சரி செய்யும் நீர்முள்ளி..! மருத்துவ பயன்கள்..!

சூடான சுவையான இளநீர் ரசம் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்..!

கர்ப்பிணி பெண்களுக்கு கால் வலி வராமல் இருக்க..! இந்த வகை காலணிகளை ட்ரை பண்ணி பாருங்க..!

அடுத்த கட்டுரையில்
Show comments