கொத்தவரங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உண்டாகும் நன்மைகள் !!

Webdunia
கொத்தவரங்காயில் வைட்டமின் A காணப்படுவதால் இது கண்பார்வையை மேம்படுத்தி நல்ல பயனை கொடுக்கிறது.

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கொத்தவரங்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்ல பயனை கொடுக்கும். ஏனெனில் இவற்றில் கலோரி அளவு குறைவாக இருந்தாலும் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள்  அதிக அளவில் காணப்படுகிறது.
 
நமது உடலின் சீரான  செயல்பாடுகளுக்கு முக்கிய காரணம் இரத்த ஓட்டம் தான்.இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு இரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அவசியம். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கொத்தவரங்காயை அதிகம் சேர்ப்பது நல்ல பயனை கொடுக்கிறது.
 
நமது உடலுக்கு நார்ச்சத்து மிகவும் அவசியம். ஏனெனில் அது நம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடம்புக்கு தேவையான தாதுக்கள், கார்போஹைடிரேட்டுகள், புரதசத்துக்களை கொடுக்கிறது.
 
எளிதில் மற்ற நோய்கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நம் உடலில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வது நல்லது.நம் உணவில் சீனி அவரைக்காயை எடுப்பதன் மூலம் அது நமக்கு நோய்எதிர்ப்பு சக்தியை அதிக அளவிற்கு தருகிறது.
 
சரும நலத்திற்கு மிகவும் நலத்தை தரக்கூடியது. மலச்சிக்கலை சரி செய்வதற்கு அன்றாட உணவில் கொத்தவரங்காய் பொரியல் செய்து சாப்பிட்டுவருவது மலச்சிக்கலை சரிசெய்து தேவையான நார்சத்துக்களை நமக்கு தருகிறது.
 
பொதுவாக எலும்புகளின் பலத்திற்கு கால்சியம் மிகவும் அவசியமாகும். கொத்தவரங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் கால்சியம் அதிக அளவில் நமக்கு கிடைக்கிறது.
 
பொதுவாக இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கையான முறையில் உருவான காய்கறிகள், பழங்கள் சேர்த்து கொள்வது அவசியம். அதில் ஒன்று தான் கொத்தவரங்காய், வாரத்தில் 2 அல்லது 3 முறை கொத்தவரங்காய் எடுப்பதன் மூலம் மாரடைப்பு தவிர்க்கப்பட்டு இதயத்திற்கு நல்ல பயனை தருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments