Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரத்த சோகையை குணப்படுத்த உதவும் பீட்ரூட் !!

Webdunia
பீட்ரூட்டில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்தானது நம் உடலில் இரத்த அணுக்களை உருவாக்கச் செய்கிறது. இதனால் நமது இரத்த ஓட்டம் அதிகரிப்பதால்,  தலைமுடி உதிர்வு என்ற பிரச்சினையே இருக்காது.
 

பீட்ரூட் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த தீர்வாக ஹோமியோபதி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். அதாவது பீட்ரூட்டை குழம்பு, பொரியல் என்று  சாப்பிடுவதைக் காட்டிலும் அரைத்து ஜூஸ் எடுத்து பாலில் கலந்து குடித்தல் மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும்.
 
பீட்ரூட்டை எந்த அளவில் நம்முடைய உணவில் எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவு சிறுநீரகம் பாதுகாக்கப்படுகிறது. அதேபோல் இந்த பீட்ரூட் ஜூஸ் தொடர்ந்து குடித்து வருவோருக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் குறைவு.
 
எந்த அளவு ஹீமோகுளோபின் அதிகரிக்கிறதோ அதே அளவு முடி உதிர்வும் இருக்காது. குறைந்ததை பீட்ரூட்டை வாரத்தில் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் சிறப்பான ரிசல்ட் கிடைக்கும். மேலும் வயிற்றில் புண் உள்ளவர்கள், கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் என அனைவருக்கும் ஏற்ற காய் பீட்ரூட் ஆகும்.
 
பீட்ரூட் ஆனது பித்தப்பையும் சுத்திகரிப்பில் துவங்கி, மூலநோயை குணப்படுத்துதல் வரை அனைத்தையும் சரி செய்கிறது. மேலும் இது இரத்த சோகையை குணப்படுத்துவதாகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முகத்தில் சரும துளைகள், கரும்புள்ளிகள் ஏற்பட என்ன காரணம்?

கண்களின் கருவளையத்தை நீக்க என்ன செய்ய வேண்டும்?

நீரிழிவு நோயாளிகளுக்கு கண்புரை நோய் வர வாய்ப்பு அதிகமா?

மூலநோய் குணமாக என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்?

ஆரோக்கியமான உயிரணுக்கள் உருவாக உதவும் மாசி கருவாடு.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments