Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக அளவு சத்துக்களை அள்ளித்தரும் பீட்ரூட் !!

Webdunia
பீட்ரூட்டில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்தானது நம் உடலில் இரத்த அணுக்களை உருவாக்கச் செய்கிறது. இதனால் நமது இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், தலைமுடி உதிர்வு என்ற பிரச்சினையே இருக்காது.

எந்த அளவு ஹீமோகுளோபின் அதிகரிக்கிறதோ அதே அளவு முடி உதிர்வும் இருக்காது. குறைந்ததை பீட்ரூட்டை வாரத்தில் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் சிறப்பான ரிசல்ட் கிடைக்கும். மேலும் வயிற்றில் புண் உள்ளவர்கள், கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் என அனைவருக்கும் ஏற்ற காய் பீட்ரூட் ஆகும்.
 
பீட்ரூட் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த தீர்வாக ஹோமியோபதி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். அதாவது பீட்ரூட்டை குழம்பு, பொரியல் என்று  சாப்பிடுவதைக் காட்டிலும் அரைத்து ஜூஸ் எடுத்து பாலில் கலந்து குடித்தல் மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும்.
 
பீட்ரூட்டை எந்த அளவில் நம்முடைய உணவில் எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவு சிறுநீரகம் பாதுகாக்கப்படுகிறது. அதேபோல் இந்த பீட்ரூட் ஜூஸ் தொடர்ந்து குடித்து வருவோருக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் குறைவு.
 
பீட்ரூட் ஆனது பித்தப்பையும் சுத்திகரிப்பில் துவங்கி, மூலநோயை குணப்படுத்துதல் வரை அனைத்தையும் சரி செய்கிறது. மேலும் இது இரத்த சோகையை குணப்படுத்துவதாகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments