Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களுக்கு ஓர் எளிய வழி..!!

உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களுக்கு ஓர் எளிய வழி..!!

Webdunia
பருவநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் ஏற்படுகிறது. இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், நீண்ட நேரம் நாற்காலியில் உட்கார்ந்து பணி புரிவதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலைமுடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.


 
 
இதன் காரணமாக பல நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலத்தில் ஒரு எளிய வழியை உங்களுக்காக சொல்லியிருக்க்றார்கள்.
 
தேவையான பொருள்கள்:
 
1. நல்லெண்ணெய்
2. பூண்டு
3. மிளகு
 
செய்முறை:
 
நல்லெண்ணையை அரை குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் மிதமான சூட்டில் எண்ணையை காலின் அதாவது இரு கால் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும். 
 
இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும். 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெற முடியும்.
 
இந்த வைத்திய முறையினை சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம். ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம்.
 
இதனை 18 வயதுக்கு மேல் ஐடி துறையில் வேலை செய்பவர்கள் வாரத்தில் இருமுறை காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் ஒருமுறை இதனை செய்து பயன்பறலாம்.

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

வியர்வை நாற்றத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?

சர்க்கரை நோயாளிகள் தயிர், மோர் சாப்பிடலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments