Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொட்டால் சிணுங்கி செடியின் அற்புத மருத்துவ பயன்கள்....!

Webdunia
‘நமஸ்காரி’ என்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது. தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள் ஆற்றல் பெருகுமாம். 
தொட்டால் சிணுங்கி செடியின் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 15  கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 
 
உடல் சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும்.  ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும். 
 
தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும். வயிற்றுப்புண்ணும் ஆறும்.
 
பெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு என்கின்ற பெரும்பாடு நோய் தீரவேண்டுமானால் தொட்டால் சுருங்கி இலையைப் பறித்து சுத்தம் செய்து, அவ்விலையோடு தேவையான அளவில் சிறுவெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து பசு மோரில் கலந்து பெண்கள்  அருந்த நோய் குணமாகும்.
 
குழிப்புண் குணமாக இவ்விலையைப் பறித்து வந்து சுத்தம் செய்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதில் இருந்து வரும் சாற்றை உடலில் ஏற்பட்டுள்ள குழிப்பண்ணீல் விடுவதோடு கொஞ்சம் இலையையும் அந்தப்புண்ணின் மீது கசக்கி வைத்து தூய்மையான துணியால் கட்டி  வந்தால் சில நாட்களிலேயே குழிப்புண் குணமாகும்.
 
மேனியில் ஏற்படும் படை, தேமல் போன்ற நோய்கள் நீண்ட நாள் இருந்து தொல்லை கொடுக்கும் வேளையில் இவ்விலையைப் பறித்து வந்து,  அதில் சாறு எடுத்து அதை நோய் மீது தடவ விரைவில் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடிக்கடி பிரியாணி சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுமா?

ஓசியில் கிடைக்கும் கருவேப்பிலையால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

கோடை காலத்திற்கேற்ற பழச்சாறுகள் என்னென்ன?

கோடை காலத்தில் மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

ஈஸியா செய்யலாம் பேச்சிலர் ஸ்டைல் எம்டி குஸ்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments