Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பாகங்களும் அற்புத பயன்கள் நிறைந்த சங்குப்பூ !!

Webdunia
சங்குப்பூ கொடியாக வளரும். இயலுபுடையது. அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப் படுகின்றது. தட்டையான காய்களையுடையது. பொதுவாக மருத்துவத்திற்கு வெண்ணிறப் பூக்களையே பயன்படுத்துகின்றனர்.

இதன் இலை, வேர் மற்றும் விதை முதலியவை மருத்துவகுணம் கொண்டவை. இது புளிப்புச்சுவை கொண்டதாக இருக்கும். இது சிறுநீர் பெருக்கும், குடற்பூச்சிகளை  கொல்லும். தாது வெப்பு அகற்றும். வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றை குணப்படுத்தும். இரத்த குழாய் அடைப்பு நீங்கும்.
 
அழகுக்காக வளர்க்கப்படும் சங்குப்பூக்கள், இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சங்குப்பூக்களை பறித்து தண்ணீரில் 24 மணிநேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்துவர இரத்தக்குழாயில் உள்ள அடைப்பு நீங்கும்.
 
நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும்போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும்.
 
ஊதா நிற சங்குப்பூவின் வேரை பாலில் வேகவைத்து உலர்த்தி பாதியளவு சுக்குடன் பொடித்து காலை மாலை 2 சிட்டிகை வெந்நீருடன் கொள்ள வாத நோய்,  வாயுவலி, சீதளம் நீங்கும். இச்சூரணத்தில் 5 அரிசி எடை குழந்தைகளுக்குக் கொடுக்க மந்தம், மலச்சிக்கல் நீங்கும். தகுந்த மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
 
நாள்பட்ட கப நோய்களுக்கு சங்குப்பூவின் பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து இருப்பத்தி நான்கு கிராம் அளவு எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வர  எழிதில் குணம் தரும்.
 
சங்குப்பூவின் வேர்ப் பட்டையை ஊறவைத்த ஊறல் குடிநீரை முப்பது மி.லி. முதல் அறுபது மி.லி. வீதம் அருந்தி வர, சிறுநீர்ப்பை நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல் மற்றும் வலி முதலிய நோய்களும் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments